10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்ணுக்கு என்ன கொடுமை நேர்ந்தது தெரியுமா?

கடன் தொல்லை காரணமாக வீட்டு வேலைக்காக விற்ற பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால், மனமுடைந்த அந்த பெண் தீயிட்டுக் கொளுத்தி உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள ஹபுர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, கடன் தொல்லைக்காக அவரது தந்தையும் சித்தியும் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டில் வேலைக்காரியாக விற்றுள்ளனர்.

வேலைக்கு சென்ற இடத்தில் உள்ள முதலாளி, தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அங்கிருந்து தப்பித்த அந்த பெண், இது தொடர்பாக தனக்கு உதவும்படி போலீஸில் புகார் அளித்தும், அந்த பெண்ணின் புகாரை போலீஸார் கண்டு கொள்ளவில்லை.

இதனால், கோபமடைந்த அந்த பெண் தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் அந்த பெண்ணின் உண்மை நிலை அறிந்த சில சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் பேரில் 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

கண்டனக் குரல் எழுந்தால் தான் நியாயம் கிடைக்குமோ..? நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு மாற்று வீடு - தமிழக அரசு உறுதி
More News >>