ரித்திகாவுக்கு இன்னொரு இறுதிசுற்றாகுமா பாக்ஸர்?

இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு பாக்ஸர் என தலைப்பு வைக்கப்பட்டு அதன், டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக இறுதிச்சுற்று நாயகி ரித்திகா நடிக்கவுள்ளார்.

பாக்ஸிங்கை மையமாக வைத்து சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் மாதவனுடன் ரித்திகா சிங் அசத்தலாக நடித்திருந்தார். அதன் பிறகு ராகவா லாரன்சுடன் சிவலிங்கா படத்தில் கமர்ஷியல் நாயகியாக ரித்திகா நடித்தார். ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை.

இந்நிலையில், மீண்டும் ஒரு பாக்ஸிங் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ரித்திகா சிங்கிற்கு கிடைத்துள்ளது.

செக்கச்சிவந்த வானம், தடம் என தொடர் வெற்றிகளை ருசித்து வரும் அருண்விஜய் இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று தாய்லாந்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

எட்செட்டரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். மார்கஸ் ஏ ஜங்கர்பர்க் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் பப்ஜி மோகமா? அதிரடி உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள்!
More News >>