மலர் டீச்சருக்கு புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

பிரமேம் படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவிக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியதை அடுத்து, தற்போது அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.

பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். சுமார் 1 ஆண்டு இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதனால் அவரது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளாராம். தமிழில் விஜய் இயக்கத்தில் கரு, செல்வராகவன் இயக்கத்தில் தயாராக இருக்கும் படம், தனுஷின் மாரி 2 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.சர்வானந்த் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒரு கோடியே 40 லட்சம் வாங்கியிருக்கிறாராம் மலர் டீச்சர். இந்த விஷயம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

More News >>