திமுக புதிய எம்.பி.க்கள் 25ம் தேதி ஆலோசனை!

திமுகவில் வெற்றி பெற்றுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் மே25ம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் முதல் ஆலோசனை கூட்டத்தை நாளை கூட்டியுள்ளனர். இது குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் 25ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. அணியில் ஐயூஎம்எல், ஐஜேக, வி.சி.க, மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒருவர், உதயசூரியன் சின்னத்தில் போடடியிட்டனர். இவர்கள் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். ஆனால், திமுக கூட்டியுள்ள கூட்டத்திற்கு இவர்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே, அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிகிறது.

More News >>