மகன் பதவியேற்பதை டி.வி.யில் பார்த்து ரசித்த ஹீராபென்

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதை அவரது தாய் ஹீராபென், தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, பிரதமாக நரேந்திர மோடி 2வது முறையாக பதவியேற்றார். ராஷ்டிரபதி பவனில் புல்வெளியில் நடந்த பிரம்மாண்டமான விழாவில், மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், மாநில கவர்னர்கள், முதலமைச்சர்கள், நீதிபதிகள் என்று ஏராளமான வி.ஐ.பி.க்களும், பா.ஜ.க. தொண்டர்களும் பங்கேற்றனர். சுமார் 6 ஆயிரம் பேர் விழாவில் நேரடியாக பங்கேற்றிருக்க, மோடியின் தாயார் ஹீராபென், காந்திநகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் மகன் பதவியேற்றதை பார்த்தார். மகன் பதவியேற்றதை பார்த்து கைதட்டி ரசித்தார்.

More News >>