பள்ளிகளில் பாலியல் கல்வி செங்கோட்டையன் தகவல்

சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு;

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. வரும் 13ம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைக்கிறார். பள்ளி மாணவர்கள் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் புதிய பஸ் பாஸ் பெறும் வரை பழைய பாஸ்களையே பயன்படுத்தலாம்.

பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் தொடர்பான கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவாதித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். அரசு பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் நிலையில் தற்போது மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

More News >>