இளம்பெண்ணின் உயிரை பறித்த டிக் டாக்..! பெண்களின் வாழ்கையை சீரழிக்கிறதா டிக் டாக்..?

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சீரனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா.

இவரது கணவர் பழனிவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே டிக் டாக் வீடியோவில் பதிவு செய்து அதை பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார் அனிதா.

இது அவரது கணவர் பழனிவேலுக்கு பிடிக்காததால், கடந்த வாரம் மனைவி அனிதாவிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தொலைபேசியில் நடைபெற்ற உரையாடலில் வாக்குவாதம் முற்றி பெரும் சண்டையாக மாறியது. இதனால் மனமுடைந்து போன அனிதா விஷம் அருந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

வாழ்க்கையை முடித்துக்கொண்ட அந்த தருணத்தை டிக் டாக் வீடியோவில் அனிதா பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அந்தக் காட்சி பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க செய்கிறது. இந்நிலையில் உயிரிழந்த அனிதா தனது மருமகன் மீது புகார் அளித்துள்ளதால் குன்னம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தமிழ் 

More News >>