தண்ணீரை பற்றி கவலை வேண்டாம்- சொல்கிறார் அமைச்சர் வேலுமணி..!

தண்ணீர் பிரச்சனையை பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.மேலும், தண்ணீர் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.

தண்ணீர் தட்டுப்பாட்டை நினைத்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அந்த திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.

-தமிழ் 

எதிர்வீட்டு பெண்ணை தாக்கிய சபாநாயகரின் டிரைவர் கைது தண்ணீர் பஞ்சம் படுத்தும்பாடு
More News >>