நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி பெருநகர காவல் ஆணையரை சந்தித்து நடிகர் விஷால் மனு

வருகிற ஜூன் 23ம் தேதி அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி பாண்டவர் அணி சார்பில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையில் அவ்வணியினர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறும்போது, வருகிற ஜீன் 23ம் தேதி நடிகர் சங்கம் தேர்தல் அன்று தேவையான போலீஸ் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளோம். மேலும் காவல் ஆணையர் உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளதாக கூறினார்.

மேலும் தேர்தல் நடக்கும் அந்த பகுதியில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் சென்று கொண்டு இருப்பதாகவும், அதேபோல் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த அங்கு இட வசதி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

- தமிழ் 

தகுதியானவர்களுக்கு மட்டுமே கலைமாமணி பரிந்துரைப்போம்; பாண்டவர் அணி தேர்தல் வாக்குறுதி
More News >>