சண்டையை விலக்கி விட சென்ற கூலித்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் கடந்த 7ஆம் தேதி இரவு அலெக்சாண்டர் என்பவருக்கும் ரமேஷ் என்ற ரவுடி கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனை அப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளி செந்தில்குமார் என்பவர் தடுக்கச் சென்ற போது அலெக்ஸாண்டர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்த குண்டு செந்தில்குமார் இடுப்புக்கு கீழே பயந்தது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற கூலித்தொழிலாளி செந்தில்குமார் சாதாரண காயமாக இருக்கும் என்று கவனிக்காமல் விட்டு விட்டார்.

இந்நிலையில் இரண்டு வாரம் கழித்து குண்டடி பட்ட இடத்தில் சீழ் பிடித்து பெரிய காயமாக மாறியதால் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் செந்தில்குமார். காயத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குண்டு உள்ளே இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற எண்ணூர் போலீசார் எப்படி துப்பாக்கி சூடு நடந்தது என விசாணை நடத்தினர்.

அப்போது நடந்ததை செந்தில்குமார் சொல்ல, அந்த தகவலின் அடிப்படையில் அலெக்ஸாண்டரையும் ரமேஷ்பாபுஆகிய இருவரையும் எண்ணூர் போலீசார் கைது செய்தனர்.

- தமிழ்

எதிர்வீட்டு பெண்ணை தாக்கிய சபாநாயகரின் டிரைவர் கைது தண்ணீர் பஞ்சம் படுத்தும்பாடு
More News >>