முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல் பரிசோதனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் உடலநல பரிசோதனை செய்யப்பட்டது.

காலை 8 மணியளவில் அப்பல்லோவுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்தம், சிறுநீர், ரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாம் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கேட்ட போது, வழக்கமாக மேற்கொள்ள வேண்டிய நார்மல் ஹெல்த் செக் அப் தான், அச்சப்படக்கூடிய அளவுக்கு வேறு ஒன்றும் இல்லை என பதில் கிடைத்தது.

இதனிடையே கடும் காய்ச்சல் காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகனும் அப்பல்லோ மருத்துவமனையில் நள்ளிரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தாரிடம் சிங்கப்பூரில் இருந்து தொலைபேசி மூலம் ஸ்டாலின் விசாரித்ததாக கூறப்படுகிறது. 

- தமிழ்

'வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும்'..! தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..!
More News >>