முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு ... அப்பலோவில் அனுமதி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இப்பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆலோசனை நடத்துவதாக இருந்தது கடைசி நேரத்தில் திடீரென ரத்தானது. நேற்று காலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு உடற் பரிசோதனை செய்து கொண்டார். அதனாலேயே தண்ணீர் பிரச்னை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட முழு உடற் பரிசோதனை முடிவுகளின்படி இருதய நோய் சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
More News >>