அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாசா செல்லும் வாய்ப்பு

தமிழகத்திலிருந்து நாசா செல்லும் வாய்ப்பு சென்னையைச் சேர்ந்த எட்டு அரசு மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.

சென்னை பெருமாநகராட்சி மற்றும் சென்னை ரோட்டரி சங்கம் இணைந்து 'விங்ஸ் டூ ப்ளை' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தினர். இப்போட்டியில் வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு அமெரிக்க விண்வெளி மையமான நாசா செல்லும் வாய்ப்பு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியில் இறுதியாக சென்னை அரசு மாநாகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு மாணவர்களும் அமெரிக்க விண்வெளி மையமான நாசாவுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்று உள்ளனர். மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் உலக நாடுகளின் நடப்புகள் குறித்து அறிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதற்காகவே இப்போட்டியும் பரிசும் அறிவிக்கப்பட்டதாக சென்னை பெருமாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

More News >>