குடிக்க தண்ணீர் எங்கே..? காலிக்குடங்களுடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தற்போது நிலவும் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அல்லாடுகின்றனர். ஒரு குடம் குடிநீருக்காக பல மணி நேரம் தவம் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக குற்றம் சாட்டி வருகிறது.

இதனால் குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் வில்லிவாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன், சேகர்பாபு எம்எல்ஏ உட்பட ஏராளமானோர் பங்கேற்று காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் தண்ணீர் பிரச்னை தீர வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என அதிமுக சார்பில் தமிழகம் இன்று கோயில்களில் யாக பூஜை நடத்தினர். இதில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை கிடுகிடு 2 நாளில் ரூ.1000 உயர்வு

 

More News >>