16 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்..! ஆந்திராவில் நிகழ்ந்த பரிதாபம்

ஆந்திர மாநிலம் குண்டூர் நகரைச் சேர்ந்த (பெயர் வேண்டாம்) இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் தனது தாத்தா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உடன் இருந்து பார்த்துக் கொள்வதற்காக வந்தார்.

மருத்துவமனையிலிருந்து தனது தாத்தாவை பார்த்துக் கொண்டார் அப்போது அந்த மருத்துவமனைக்கு வந்து சென்ற ராம் என்ற டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பெற்றோர் தமது பெண்ணை ஊருக்கு வரவழைத்தனர். இருந்த போதிலும் இவர்களுடைய தொடர்பு மொபைல் போன் வாயிலாக தொடர்ந்து வந்தது. இதனைப் பெற்றோர்கள் கண்டித்ததால் ராமுவிற்கு போன் செய்து கூறியுள்ளார்.

ராமு உடனடியாக ஓங்கோலுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அதிகாலையிலேயே சென்றுள்ளார். ஓங்கோல் பேருந்து நிலையத்திற்கு காலை 9 மணிக்கு வந்த அந்த இளம்பெண் தொடர்ந்து ராமுவுக்கு அருகிலிருந்த கடையிலிருந்து போன் செய்துள்ளார். மாலை வரை ராமு போனை எடுக்காததால் விரக்தியுடன் அழுதபடி ஒரு கடையின் அருகில் அமர்ந்து உள்ளார்.

இதனைக் கண்ட கடையில் வேலை பார்க்கும் பாஜி என்ற ஊனமுற்றவர் இந்த இளம் பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவளது நிலை அறிந்து கொண்ட பாஜி அந்த இளம் பெண்ணை ராமு தனது நண்பன் தான் அவனிடம் உன்னை பத்திரமாக சேர்ப்பதாகக் கூறி பாஜி தனது நண்பன் ஆகாஷின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஆகாஷ் மற்றும் பாஜி இருவரும் இணைந்து அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை அடைத்து வைத்து விட்டு இரண்டு நாள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

அவர்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க அருகிலுள்ள மற்றொரு இன்ஜினியரிங் மாணவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேலும் 4 பேர் இருந்த நிலையில் மொத்தம் 6 பேர் இந்த இளம் பெண்ணை நான்கு நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த இளம்பெண் ஒரு வழியாக தப்பித்து ஓங்கோலில் உள்ள பேருந்து நிலையத்தில் வந்து தனியாக அழுது கொண்டிருந்த போது அங்கு வந்த பேருந்து நிலைய கண்காணிப்பாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பெண்னை 6 இளைஞர்கள் தனி அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜி, ஆகாஷ் உள்பட இரண்டு இன்ஜினியரிங் மாணவர்களை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு வரவழைத்த ராமு என்ற ஓட்டுனரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக ஓங்கோலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் 9 மாத கைக்குழந்தையை கொலை செய்த கொடூரன்..! பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்மஅடி
More News >>