ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போல் ரஜினி, கமலுக்கு தைரியம் கிடையாது - வைத்திலிங்கம்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் ரஜினி, கமலுக்கு தைரியம் கிடையாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர்கள் ருக்மணி கிருஷ்ணன், பொன்.முத்துவேல், பகுதிச்செயலாளர்கள் அறிவுடைநம்பி, எஸ்.சரவணன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், கோ.சாமிவேல், சத்தியமூர்த்தி, துரை.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வைத்திலிங்கம் பேசுகையில், “ஜனநாயக நாட்டில் யாரும் கட்சி ஆரம்பிக்கலாம். மக்கள் ஏற்றுக்கொள்வதை பொறுத்து தான் அவர்களுடைய அரசியல் பயணம் இருக்கும். இன்றைக்கு காவிரியில் தண்ணீர் இல்லை.

தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறும் ரஜினிகாந்த், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் பேசி தண்ணீர் திறந்து விடுங்கள் என்று சொன்னாரா? ஏன், வாய் திறக்கவில்லை. கமலஹாசன் பேசினாரா?.

இவர்கள் எல்லாம் அரசியலில் நிற்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் அவர்களுக்கு தைரியம் கிடையாது. அவர்களுடைய ஆற்றல் எல்லோருக்கும் வராது” என்று பேசியுள்ளார்.

More News >>