உலகக் கோப்பை கிரிக்கெட் மே.இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்விகளால் துவண்டு போயுள்ள மே.இந்திய தீவுகள் அணியை, வெற்றி மேல் வெற்றி என இத்தொடரில் இதுவரை தோல்வியே காணாத இந்தியா எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் வெற்றி தொடரும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.

மான்செஸ்டரில் நடைபெறும் போட்டியில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப் படாமல், கடந்த முறை ஆப்கனுக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்களே இப்போதும் களம் காண்கின்றனர்.

ரன் குவிப்புக்கு சாதகமான மான்செஸ்டர் ஓல்டு டிராபோல்டு மைதானத்தில் இத்தொடரில் 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த 3 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்ததுடன், வெற்றியும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணி ரன்களைக் குவித்து வெற்றியையும் அறுவடை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

உலகக் கோப்பை கிரிக்கெட்; ஆப்கன் பந்து வீச்சில் சொதப்பல் - இந்தியா 224/8
More News >>