குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியா இது? பெற்றோரே உஷார் : கஸ்தூரி வார்னிங்

‘போதும் வி்ட்ருங்கப்பா...’’ என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

சமீபகாலமாக அரசியல் விமர்சகராக உருவெடுத்து, ஊடக விவாதங்களில் பங்கேற்று வரும் நடிகை கஸ்தூரி, சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். முக்கிய நிகழ்வுகளுக்கு அதிரடியாக கமென்ட்ஸ் போடுவார். அந்த வகையில், விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து நேற்று(ஜூன்28) ஒரு ட்விட் போட்டிருந்தார். அதில் அவர் பதிவிட்டிருந்தது...

இதே சேனல்ல "கதையல்ல.. னு" சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க... அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக்.

போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க... இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப் போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு...

எங்க பிளாட்ஸ் ல எல்லா வீட்டுலயும் குழந்தைகளாம் பாக்குறாங்க.... குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது? Parents, be responsible !

இவ்வாறு கஸ்தூரி பதிவிட்டிருந்தார்.

இதற்கு பலரும் கமென்ட்ஸ் போட்டிருக்கின்றனர். அதில் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச உடைகளில் காட்சி தரும் பெண்களின் படத்தைப் போட்டு, ‘‘குழந்தைங்க இந்த நிகழ்ச்சியை பார்க்கலே மேடம், அவங்க டிரஸ்ஸை எல்லாம் பாத்துட்டு, தங்களுக்கு போட வேண்டிய டிரஸ்ஸை பிக்பாஸ் பொண்ணுங்க போட்டுருக்காங்களேன்னு பொறாமையாக பாக்குறாங்க’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

இன்னொருவரோ, கஸ்தூரியின் கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு, அவரை கிண்டலடித்திருக்கிறார்.

நான் இனிமே பேபி சாரா இல்லை
More News >>