திமுக மா.செ.க்கள் கூட்டம் அன்பகத்தில் 15ல் நடக்கிறது

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தலைவர் ஸ்டாலின் தலைமையில்  வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்கு அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெறும். இதில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில்தான் நடைபெறும். ஆனால், இம்முறை இளைஞர் அணி தலைமை அலுவலகமான அன்பகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ராஜ்யசபா தேர்தல்... திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ வாபஸ்..! 6 பேர் போட்டியின்றி தேர்வு உறுதி
More News >>