அசத்தலான சுவையில் ஆலு பூரி ரெசிபி

சுவையான ஆலு பூரி.. அதாவது உருளைக்கிழங்கைக் கொண்டு மசாலா பூரி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருள்:

உருளைக்கிழங்கு - 150 கிராம்

கோதுமை மாவு - 150 கிராம்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும்.அத்துடன், கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

பூரி மாவு பதத்திற்கு கொண்டு வந்ததும், சிறு உருண்டைகளாக எடுத்து பிரட்டவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.

பூரி உப்பி வரும்போது எடுத்து சுடச்சுட பரிமாறவும்.

சுவையான ஆலு பூரி ரெடி..!

More News >>