பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் தொல்லை! மர்ம நபர் கைது

பிரபல வங்காள மொழி திரைப்பட நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் ஆபாசமாக சித்தரித்து, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அருணிமா கோஷ்... இவர் வங்காள மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். மேலும் டிவி நிகழ்ச்சிகள், மாடலிங் துறையிலும் மிகவும் பிரபலம். இவருக்கு சமீப காலமாக சமூக வலைதளம் மூலம் ஒரு நபர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.போலியான பெயரில் கணக்கு தொடங்கி ஆபாசமான, அருவெறுக்கத்தக்க வகையில் பதிவுகளைப் போட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் நொந்து போனார் அருணிமா கோஷ். இந்தத் தொடர் தொல்லையைப் பொறுக்க முடியாத நடிகை கொல்கத்தா போலீசில் புகார் செய்தார்.

சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளங்களை அலசி ஆராய்ந்ததில் தெற்கு கொல்கத்தாவைச் சேர்ந்த முகேஷ் ஷா என்ற நபர் , முகேஷ் மயங்க் என்ற போலியான பெயரில், நடிகைக்கு இந்தத் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்து கைது செய்துள்ளனர்.

இது குறித்து நடிகை அருணிமா கோஷ் கூறுகையில், கடந்த மே 30-ந் தேதி முதல் இந்த நபர் மோசமாகவும், ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க வகையிலும் பதிவுகளை போட்டு வந்தார். ஆரம்பத்தில் இதனை நான் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் நாளுக்கு நாள் தொல்லை அதிகரிக்க வே, போலீசில் புகார் செய்தேன் என்று கூறியுள்ளார்.

பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் பயங்கரம்; ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
More News >>