சசிகலாவை வெளியே கொண்டு வர முயற்சி டி.டி.வி.தினகரன் பேட்டி

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவை வெளியே கொண்டு வர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவ்வப்போது பெங்களூருக்கு சென்று பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து வருகிறார். நேற்று அவர் சசிகலாவை சந்தித்து விட்டு அவர் வெளியே வந்த போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். சட்டப்பேரவையில் வாக்குவாதம் நடந்தால் சபையை ஒத்திவைக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு கூறினார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது?- தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

More News >>