கையை பின்னால் கட்டிக்கொண்டு 10 மணி நேரம் தொடர்ந்து பந்துவீசி தமிழக வீரர் அதிசய சாதனை

தமிழக வீரர் செந்தில்குமார் இடது கையை பின்னால் கட்டிக்கொண்டு தொடர்ந்து 10 மணி நேரம் பந்துவீசி அதிசய சாதனையை படைத்துள்ளார்.

கிரிக்கெட்டில் தொடர்ந்து 10 ஓவர்கள் வீசுவதே சிரமமாக இருக்கும். டெஸ்ட் போட்டிகள் என்றால் மட்டும் 20 முதல் 30 ஓவர்கள் வீசுவார்கள். ஆனால், நமது தமிழக வீரர் ஒருவர் தொடர்ந்து 10 மணி நேரம் பந்துவீசி அசத்தியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மூன்றாமாண்டு வரலாறு பயிலும் மாணவர் எம்.செந்தில்வேல்குமார். இவர்தான் இடதுகையைப் பின்னால் கட்டிக்கொண்டு வலதுகையால் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 10 மணிநேரம் தொடர்ந்து பந்துவீசி உலக சாதனை படைத்தார்.

இந்த அரிய சாதனையை வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரிகார்ட் அமைப்பு உலக சாதனையாகப் பதிவுசெய்து சான்றிதழ் வழங்கியது. வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரிகார்ட் அமைப்பை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>