7 வயது சிறுவனை கொன்று சூட்கேசில் மறைத்த கொடூரம் : வாலிபர் கைது

புதுடெல்லி: 7 வயது சிறுவனை கொலை செய்துவிட்டு சூட்கேசில் மறைத்து வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு டெல்லி, நாதபுரா பகுதியை சேர்ந்த தம்பதியின் மகன் அசிஷ் (7). இவன் கடந்த மாதம் 7ம் தேதி முதல் திடீரென காணாமல் போனான். இதுகுறித்து அசிஷின் பெற்றொர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து டெல்லி சுவரூப் நகர் போலீசார் சிறுவன் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறுவன் வசித்து வந்த வீட்டில் இருந்து சில தெருக்கள் தள்ளியுள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசுயுள்ளது. இதுகுறித்து அந்த வீட்டில் வசிக்கும் வாலிபரிடம் அக்கம் பக்கத்தினர் கேட்டபோது பெரிச்சாளிகள் செத்துக் கிடப்பதாக கூறியுள்ளார்.

ஆனால், துர்நாற்றம் தொடர்ந்து வீசியதை அடுத்து சந்தேகமடைந்த பொது மக்கள் இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த ஒரு சூட்கேசை திறந்து பார்த்தபோது, சிறுவன் அசிஷ் உடல் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் போலீசார் உடனடியாக வாலிபரை கைது செய்தனர்.

இதுகுறித்து கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவனது பெயர் அவதேஷ் என்றும், தன்னை ஒரு சிபிஐ அதிகாரி என்றும் ஐஏஎஸ் தேர்வு எழுத படித்து வருவதாகவும் அக்கம் பக்கத்தினருடன் நடித்து வந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், சிறுவனின் பெற்றோர் மீது இருந்த முன்விரோதத்தில் அவர் அசிஷை கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளான்.அவதேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

More News >>