ldquoபிரபலமடைந்தது வேதனை அளிக்கிறதுrdquo: ஓவர்நைட் பிரபலம் பிரியா பிரகாஷ் குடும்பம்!

உலகம் முழுவதும் ஒரே பாடலில் ஒரே கண் அசைவின் மூலம் திடீரென பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியரின் குடும்பத்தார் தங்களது இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

வலைதளங்களில் இரண்டு நாள்களுக்கு முன்னர் ஓவர்நைட்டில் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். 'ஒரு அடார் லவ்' என்ற மலையாளத் திரைப்படம் மூலம் வெளியான ஒரு பாடல் வீடியோவின் மூலம் திடீரென பிரபலமடைந்ததால் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் மில்லியன் கணக்கில் இவருக்கு ரசிகர்கள் சேரத் தொடங்கினர்.

பத்திரிகைகளும், டிவி சேனல்களும் என ஊடகங்களும் பிரியா பிரகாஷ் வாரியரின் வீட்டை மொய்க்கத் தற்போது அதிகப்படியான கவனத்தால் பிரியா பிரகாஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும் இதுகுறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு பிரியா பிரகாஷின் தாயார் மட்டும் பதிலளித்து வருகிறார். அவர் கூறுகையில், "பிரியா பிரகாஷ் நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சி பிரபலமடைந்ததால் அவருக்கு ரசிகர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் போலி கணக்குகளில் பலரும் பிரியாவின் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் இயக்குநர் படம் முடியும் வரையில் யாருக்கும் பேட்டி அளிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். எங்களது இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் ரசிகர்கள் தொல்லை அதிகம் உள்ளதால் பிரியா அவளது கல்லூரி விடுதிக்குச் சென்றுவிட்டார்" என்றார்.

More News >>