கர்நாடக சட்டசபையில் 29ல் நம்பிக்கை வாக்கெடுப்பு எடியூரப்பா பேட்டி

சட்டசபையில் வரும் 29-ம் தேதியன்று காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கர்நாடக சட்டசபையில் ஜூலை 29-ம் தேதியன்று காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பேன். பெரும்பான்மையை நிரூபித்தவுடன், சட்டசபையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்படும். எக்காரணத்தைக் கொண்டும் நான் தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன். யார் தவறு செய்திருந்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணம் கொண்டவன் நான். விவசாயிகளின் கஷ்டங்களை போக்குவதுதான் எனது முதல் கடமையாக கருதுகிறேன். அமைச்சரவை அமைப்பது குறித்து பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசிப்போம். நாளையே டெல்லிக்கு சென்று ஆலோசித்து, யார், யார் அமைச்சர்கள் என்று முடிவு செய்வோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

More News >>