அசத்தும் சுவையில் கற்கண்டு பொங்கல் ரெசிபி

சுவையான கற்கண்டு பொங்கல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

அரிசி - அரை கப்

கற்கண்டு - 200 கிராம்

பால் - ஒரு கப்

ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்

முந்திரி - 10

உலர்ந்த திராட்சை - 10

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி கற்கண்டு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக கலந்து வேகவிடவும்.

அரிசி நன்றாக வெந்ததும், கற்கண்டு சிரிப் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.அத்துடன், வறுத்த முந்திரி, உலர் திராட்சை, நெய் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள்விட்டு இறக்கவும்.

சுவையான கற்கண்டு பொங்கல் ரெடி..!

More News >>