ஓட்டலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி

காஞ்சிபுரம்: ஓட்டல் ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் என்ற இடம் உள்ளது. இங்கு, செயல்பட்டு வரும் ஓட்டல் ஒன்றில் இன்று தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

இதில், 3 தொழிலாகளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஷ வாயுவை சுவாசித்து மயக்கமடைந்த மேலும் 2 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>