டெல்லியில் நள்ளிரவில் தீ 5 பேர் சாவு, 11 பேர் காயம்

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு திடீரென தீப்பற்றியது. மக்கள் உஷாராகி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மளமளவென பரவியதில் பலர் தீவளையத்திற்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 8 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமார் 20 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்து ஹோலி பேமிலி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் மாலா கூறுகையில், ‘ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார். தீ விபத்து காரணம் குறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஷ்மீரில் ஊடுருவ முயன்று கொல்லப்பட்ட 7 பாக்.வீரர்கள்; சடலங்களை எடுத்துச் செல்ல இந்தியா அனுமதி

More News >>