மதுகுடிப்போர் சங்கத் தலைவருக்கு வேலூரில் கிடைத்த 2530 வாக்குகள்!

வேலூர் மக்களவை தொகுதியில் மது குடிப்போர் சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனுக்கு 2530 வாக்குகள் கிடைத்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனும் ஒருவர். தேர்தலி்ல் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முடிவில், கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனுக்கு 2530 வாக்குகள் கிடைத்துள்ளன. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘எனக்கு 2530 வாக்குகள் அள்ளித் தந்தற்கு நன்றி, வேலூர் மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கும், டாஸ்மாக் மது பிரியர்களின் குடும்பங்களுக்கும் இதயப்பூர்வமான நன்றியை பாதங்களில் சமர்பிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

More News >>