காதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசித்த நயன்தாரா

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் காஞ்சி அத்தி வரதரை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நாளையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைய உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் அத்தி வரதரை தரிசித்து வரும் நிலையில் அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நள்ளிரவில் தரிசனம் செய்தார்.இந்நிலையில் நேற்று நள்ளிரவு நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வருகை தந்து அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்தார். அப்போது இருவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்து சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. நயன்தாரா அத்தி வரதரை தரிசனம் செய்த படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

More News >>