செப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா

தேமுதிக கட்சியின் சார்பில் அடுத்த மாதம் 15ம் தேதி, திருப்பூரில் முப்பெரும் விழா நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியுற்றது. இதன்பின், கட்சியில் செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் காணப்பட்டது.

 

இந்நிலையில், தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், செப்டம்பர் 15ம் தேதி திருப்பூரில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

 

விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15வது ஆண்டு துவக்க விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று முப்பெரும் விழாவாக நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>