காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மாற்றி அமைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:-

காவிரி நீரை மாநிலங்கள் சொந்தம் கொண்டாட முடியாது இது தேசத்தின் சொத்து.

தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நீரின் அளவைக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (முன்னர் 192 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்கப்பட்டிருந்தது)

கர்நாடகாவுக்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக ஒதுக்கீடு செய்து உத்தரவு. மேலும், தீர்பின் முழு விவரங்கள் விரைவில் வெளியாகும்.

More News >>