அ.ம.மு.க.வில் மேலும் 24 புதிய மாவட்டச் செயலர்கள்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

அ.ம.மு.க.வில் மேலும் 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஏற்கனவே 19 புதிய மாவட்டச் செயலாளர்களை அறிவித்தார். இதன்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு ஏழுமலை, தென் சென்னை தெற்கு மாவட்டத்திற்கு விருகை கண்ணன், தேனி மாவட்டத்திற்கு முத்துச்சாமி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு பொன்ராஜா, திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு லக்கி முருகன், திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு மலைமேகம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, மேலும் 24 கட்சி மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களை டி.டி.வி.தினகரன் இன்று அறிவித்தார்.

அதன்படி, வடசென்னை வடக்கு : வெற்றிவேல், வடசென்னை தெற்கு :சந்தானகிருஷ்ணன், செங்கல்பட்டு வடக்கு:கரிகாலன், செங்கல்பட்டு தெற்கு : கோதண்டபாணி, காஞ்சிபுரம் :மொளத்தூர் பெருமாள். திருவண்ணாமலை வடக்கு : மா.கி.வரதராஜன், திருவண்ணாமலை மத்தி: ஏ.ஜி.பஞ்சாட்சரம், திருவண்ணாமலை தெற்கு : எஸ்.ஆர்.தருமலிங்கம், தர்மபுரி : டி.கே.ராஜேந்திரன், சேலம்புறநகர் கிழக்கு : வீரபாண்டி செல்வம், சேலம் மத்தி : வெங்கடலாஜலம், சேலம் புறநகர் மேற்கு : மாதேஸ்வரன், நாமக்கல் கிழக்கு : சம்பத்குமார், நாமக்கல் மேற்கு : சுவாமிநாதன், திருப்பூர் புறநகர் : சண்முகவேலு, கோவை மாநகர் வடக்கு : அலாவுதீன், கோவை மாநகர் தெற்கு : துரைசாமி, கோவை புறநகர் : சுகுமார், நீலகிரி : கலைச்செல்வன், பெரம்பலூர் : கார்த்திகேயன், அரியலூர் : துரை மணிவேல், விருதுநகர் மேற்கு : எதிர்கோட்டை சுப்பிரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

More News >>