அஜித் படத்துக்கு கூட செய்யாததை விஜய் படத்திற்காக செய்யும் நயன்தாரா!

பிகில் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக நடிகர் அஜித் வழியை நடிகை நயன்தாரா பின்பற்றி வருகிறார். அதாவது ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகும் போதே, படத்தில் நடிப்பதை தவிர்த்து எந்த விதமான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டேன் என்பது தான் அது.

பெரிய ஹீரோ படங்களில் மட்டுமின்றி, தான் சோலோவாக நடித்த அறம், டோரா, கோலமாவு கோகிலா, மாயா, ஐரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு கூட நயன்தாரா பங்கேற்கவில்லை.

இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், அஜித்தும், நயன்தாராவும் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், வரும் வியாழனன்று நடைபெற உள்ள பிகில் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா தனது கொள்கையை சற்று தளர்த்திக் கொண்டு பங்கேற்க உள்ளதாக தகவல்கள் லீக் ஆகியுள்ளன.

பெண்களுக்கான படம் என்பதால், நயன்தாரா இந்த நிகழ்ச்சிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் நயன்தாரா ரீ எண்ட்ரி கொடுத்து லேடி சூப்பர்ஸ்டார் ஆகியுள்ள நிலையில், அட்லீயின் படம் பிகில் என்பதாலும், நயன்தாரா நிகழ்ச்சிக்கு வர சம்மதம் தெரிவித்திருப்பார் என்ற பேச்சுக்களும் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் 19ம் தேதி நடைபெற உள்ள பிகில் இசை வெளியீட்டு விழா, வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>