7 ஆண்டுகள் கழித்து பாலிவுட்டில் ரீமேக்காகும் ஆர்யா படம்!

டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகவுள்ள பாகி 3ம் பாகம், ஆர்யாவின் வேட்டை படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவான பாகி முதல் பாகம் தெலுங்கிலும் தமிழிலும் வெளியான வர்ஷம் மற்றும் மழை படத்தின் ரீமேக். அடுத்து, பாகி 2ம் பாகம், தெலுங்கு படமான ஷனம் படத்தின் ரீமேக்.

தற்போது உருவாகவுள்ள பாகி 3ம் பாகம், தமிழில் லிங்குசாமி இயக்கத்தில், ஆர்யா, மாதவன், அமலாபால் மற்றும் சமீரா ரெட்டி நடிப்பில் வெளியான வேட்டை படத்தின் ரீமேக்காம்.

அண்ணன், தம்பி கதையாக உருவான வேட்டை படம் தமிழில் கமர்ஷியல் ஹிட் அடித்தது. 2012ம் ஆண்டு வெளியான இந்த படம் 7 ஆண்டுகள் கழித்து இப்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகி படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளை கருவாக வைத்துக் கொண்டு படத்திற்கான திரைக்களம் கிடைக்காமல், இப்படி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் கதைகளை உருவி தனது ஸ்டைலில் படத்தை உருவாக்கி வருகின்றனர்.

பாகி 1 மற்றும் 2ம் பாகத்தில் நாயகியாக நடித்த ஷ்ரத்தா கபூர் இந்த படத்திலும் நாயகியாக தொடர்கிறார். தமிழில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் ஜெனிலியாவின் கணவரும் பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமீரா ரெட்டி கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார்கள் என்ற தகவல் தற்போதைக்கு வெளி வரவில்லை.

More News >>