கோமாளி இயக்குனருடன் இணையும் விக்ரம்!

கோமாளி படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தற்போது இவர் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி, காஜல், யோகி பாபு என பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கோமாளி இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு படத்தின் கதையும் அதில் நடித்த கதாபாத்திரங்களும் இருந்தது.

இந்த படம் மக்களிடையிலும், விமர்சனர்களிடையிலும் நல்ல வரவேற்பை பெற்றதால் அப்படக்குழுவின் சார்பில் அந்த படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு புதிய கார் அண்மையில் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும், மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் படத்திலும் விக்ரம் இணைந்துள்ளார். மேலும் அந்த படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>