காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. பஸ்சை வழிமறிக்க முயற்சி..

காஷ்மீரில் பயணிகள் பேருந்தை வழிமறிக்க முயன்ற தீவிரவாதிகள் அது முடியாமல் போகவே வெடிகுண்டுகளை வீசினர்.

காஷ்மீரில் மாமூல் நிலைமை ஓரளவுக்கு திரும்பியுள்ளது. இதனால், அங்கு 105 காவல் நிலைய சரகப் பகுதிகளில் பகல் வேளையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக டிஜிபி தில்பக் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில், ரம்பான் மாவட்டம், பட்டோட் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மூன்று தீவிரவாதிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்ட ஓட்டுநர் வேகமாக ஓட்டிச் சென்று விட்டார். அதன்பிறகு, அவர் ெகாடுத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போது தீவிரவாதிகள் குண்டுகளை வீசி விட்டு, ஒரு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

அங்கிருந்தபடியே பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். தொடர்ந்து தீவிரவாதிகளுடன் சண்டை நடக்கிறது.

இதே போல், கன்டர்பால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிந்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

More News >>