இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பண மோசடி புகார்... பட நிறுவனம் மறுப்பு...

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த ட்ராபிக் ராமசாமி படத்தின் தமிழக ஒளிபரப்பு உரிமத்தை தருவதாக கூறி, கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்ரமணியன் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்.ஏ.சந்திரகேசர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்த பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி பிரம்மானந்தம் சுப்ரமணியன் சார்பில் மணிமாறன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகரின் க்ரீன் சிக்னல் தயாரிப்பு நிறுவனம், 40 ஆண்டுகால திரையுலக வாழ்வில் எஸ்.ஏ.சந்திரசேகர் யாரையும் ஏமாற்றியதாக இதுவரை எந்த புகாரும் இல்லை என்றும், அவரது பெயருக்கு களங்கம் விளைவித்து மன உளைச்சலை ஏற்படுத்தவே இந்த மோசடி புகார் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை நடந்த உண்மைகளை ஆதாரத்துடன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாராக அளிக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News >>