சித்தார்த் சீரியஸானவரா.. கேத்ரின் தெரசா கணிப்பு என்ன.. அருவம் பட விழாவில் ருசிகரம்

டிரெய்டன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் படம் “அருவம்”. சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்குகிறார். கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகும் இப்படத்துக்கு எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார்.

படம் பற்றி சித்தார்த் கூறும்போது,' உணவில் கலப்படம் பரவுவதை சொல்லும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கதையாக இது உருவாகியிருக்கிறது. சமூகத்தின் மீது கோபம் உள்ள கேரக்டர் எனக்கு உண்மையில் பொருந்தி போகக்கூடியது. அதற்காகத்தான் இந்தப்படம் செய்தேன். காத்ரீனுக்கு மிகவும் கனமான கேரக்டர். எப்போதும் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயினுக்கு பாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன் அப்படி இருந்தால் படம் நன்றாக இருக்கும் இந்தப்படத்தில் அது சரியாக அமைந்துள்ளது' என்றார்.

கேத்ரீன் தெரசா கூறும்போது,' ஜோதி எனும் எனது கேரக்டர் சவால் நிறைந்தது. ஹீரோ சித்தார்த் ரொம்ப சீரியஸானவர் என நினத்தேன் ஆனால் அவர் ஜாலியாக இருந்தார். படத்தில் 2 பாடல்கள் தான், நன்றாக வந்துள்ளது எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் படமாக இது இருக்கும் என்றார்.

சித்தார்த் ரொம்ப சீரியஸானவர் என்று கேத்ரின் சொன்னபோது அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

More News >>