தர்பார் பட புரமோஷனிலாவது பங்கேற்பாரா நயன்தாரா?

நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. ஆனாலூம் அவரை நடிக்க வைத்தால் பட வியாபாரத்துக்கு பிளஸ் என தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எண்ணுகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதையும் கடந்த பல வருடங்களாகவே தவிர்த்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் வோக் ஆங்கில இதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார் .

ஹீரோயின் முக்கியத்துவ கதைகளில் நடிக்கும் நீங்கள் இன்னும் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது ஏன் என்று நயன்தாராவிடம் கேட்டபோது, ”சில நேரங்களில் வேறு வழி இல்லை. எவ்வளவு நாட்கள் தான் முடியாது என்று என்னால் சொல்ல முடியும்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது,வெற்றியை நான் தலைக்கேற்ற மாட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்.

பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்காதது பற்றி கேட்கிறார்கள். பல நேரங்களில் என்னைப்பற்றி தவறான  செய்திகள் வெளியிடுவதுதான் அதற்கு காரணம்” என்றார் நயன்தாரா. பட புரமோஷன்களில் நயன்தாரா பங்கேற்பதில்லை என்ற பாலிசியை விஜய் நடித்த பிகில் படத்துக்கும் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்துக்கும் தளர்த்தி அவற்றில் ப்ங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவற்றிலும் அவர் பங்கேற்கவில்லை. அடுத்து ரஜினியுடன் நடித்திருக்கும் தர்பார் பட புரமோஷனில் பங்கேற்பாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News >>