திருமண விழாவில் சோகம்: சிலிண்டர் வெடித்து 18 பேர் பரிதாப பலி

ஜெய்ப்பூர்: திருமண விழா ஒன்றில் திடீரென சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உடல் சிதறி பலியாயினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பீவார் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருமண விழா நடைபெற்றது. ஓட்டலின் இரண்டாவது மாடியில் சமையல் வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தன.

அப்போது, திடீரென சமையால் கியாஸ் சிலிணடர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் பலர் சிக்கினர். விபத்து குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினருடன் போலீசார் விரைந்தனர்.இதில், சமையல் வேலையில் ஈடுப்பட்டிருந்தவர்கள் உள்பட குழந்தைகள், பெண்கள் என 9 பேர் பலியாயிகியதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்தது.

மேலும், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததை அடுத்து அவர்கள் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுபநிகழ்ச்சியில், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>