தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா கறார்.. பாக்கி சம்பளம் கேட்டதால் பரபரப்பு..

ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். ஏ.ஆர்.முருக தாஸ் இயக்குகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டது அடுத்து டப்பிங் உள்ளிட்ட வேலைகளை தொடங்க இருக்கிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா, தனக்கு பேசப்பட்ட சம்பளம் முழுமையாக தரப்படாததால் கடைசி நாள் படப்பிடிப்பை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

வழக்கமாக படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை களுக்கு ஒப்பந்தமாகும்போது குறிப்பிட்ட தொகையையும், மீத தொகையை டப்பிங் சமயத்திலும் வழங்குவார்கள். ஆனால், நயன்தாரா விற்கு டப்பிங் பேசுவதில்லை. வேறு ஒருவர் டப்பிங் செய்வதால் கடைசி நாள் படப்பிடிப்பின் போது முழு சம்பளத்தையும் நயன்தாரா பெற்று கொள்வது வழக்கம்.

தர்பார் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது மீதம் தரவேண்டிய சம்பளத்தை தந்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறிவிட்டாராம். பின்னர் முருகதாஸ் மீதி சம்பளத்துக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறிய பிறகே நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

More News >>