பிரிட்டன் காவல்துறையைக் கலக்கக் காத்திருக்கும் இந்தியர்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் காவல்துறை அதிகாரி ஒருவர் விரைவில் பிரிட்டனின் தீவிரவாத எதிர்ப்புத் துறையின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்க உள்ளார்.

பிரிட்டனின் தீவிரவார எதிர்ப்புப்பிரிவு காவல்துறையை இதுவரையில் ஸ்காட்லாந்து போலீஸார் கவனித்து வந்தார். இந்தப் படை அடுத்த ஆண்டு உடன் தங்கள் பணியை நிறைவு செய்வதால் விரைவில் பிரிட்டன் போலீஸாரே முன்னெடுக்க உள்ளனர்.

இதையடுத்து இப்புதிய படைக்கான உயர் அதிகாரியாக பிரிட்டன்வாழ் இந்தியர் நெய்ல் பாசு நியமிக்கப்பட உள்ளார்.

பிரிட்டனிலிருந்து பலர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் இணைவதாலும் தொடர்பு கொண்டிருப்பதாலும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் துடிப்புடன் செயலாற்ற உள்ளதாகவும், இப்பிரிவின் தலைவராக நெய்ல் பாசு நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News >>