தீர்ப்புக்குப் பிறகு சிறுமி ஹாசினி புகைப்படத்தைப் பார்த்து கதறியழுத தந்தை!

தஷ்வந்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, ஹாசினியின் புகைப்படத்தைப் பார்த்து அவருடைய தந்தை கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.

சென்னையைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தஷ்வந்தை சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியில் வந்த தஷ்வந்த் தனது தாய் பணம் கொடுக்காத காரணத்தால் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினான்.

மும்பையில் மீண்டும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்தை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தஷ்வந்தை ஆஜர்படுத்தியதை அடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

கடந்த சில மாதங்களாக நடந்து வந்த ஹாசினி கொலை வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என மகிளா நீதிமன்றம் தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்து விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும், 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

தீர்ப்பைக் கேட்ட பிறகு சிறுமி ஹாசினியின் புகைப்படத்தைப் பார்த்து, அவரது தந்தை பாபு கதறி அழுதுள்ளார். மேலும், ஹாசினிக்கு நியாயம் கிடைத்துள்ளதாகவும், தனது குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

More News >>