அஜய்தேவ்கனுக்கு ரூ. 30 கோடி சம்பளம்? ராஜமவுலி படத்தில் நடிக்கிறார்

நம்மூர் பிரபல ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பாலிவுட்டி லிருந்து நடிக்க வரும் பிரபல நடிகர்கள் சம்பளம் வாங்குகின்றனர்.

2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய் குமாருக்கு பெரிய அளவில் சம்பளம் தரப்பட்டது. அவரைத் தொடர்ந்து தற்போது ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படம் மூலம் வில்லனாக நடிக்க வருகிறார் அஜய்தேவகன். இப்படத்தில் ஹீரோக்களாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கின்றனர். ஹீரோயினாக அலியாபட் நடிக்கிறார்.

அஜய்தேவ்கன் வில்லன் வேடம் ஏற்கிறார். அவரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைப்பதற்குள் படக்குழு படாதபாடு பட்டுவிட்டது. ஏனென்றால் இதுவரை அவர் தென்னிந்திய படங்களில் நடித்ததில்லை. ராஜமவுலியே அவரை நேரில் சந்தித்து படத்தின் ஸ்கிரிப்ட்டை கூறி நடிக்க சம்மதம் பெற்றார்.

அஜய்தேவகன் நடிக்கவந்ததுகூட பரபரப்பாக வில்லை ஆனால் அவருக்கு ரூ. 30 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக வெளியான தகவல் திரையுலகை பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

கோலிவுட், டோலிவுட்டிலேயே ஏராளமான வில்லன் நடிகர்கள் இருக்கும்போது பாலிவுட் நடிகர்களை இயக்குனர்கள் தேடிச் செல்வதற்கு காரணம் இந்தியிலும் தாங்கள் இயக்கும் படங்களின் மார்க்கெட்டை உயர்த்துவதற்குதான் என்பது ஊரறிந்த ரகசியம்.

More News >>