விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..

கார்த்தி படத்துக்கு யூ/ஏ சான்று.. தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக விஜய்-கார்த்தி படங்கள் வெளிவர காத்திருக்கிறது. ரசிகர்களும் பட்டாசும் கையுமாக வெடித்து தூள்கிளப் காத்துக்கொண்டிருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது. கைதி படப்பிடிப்பு முழுவதும் இரவில் நடந்திருக்கிறது.

இதில் ஹீரோயின் கிடையாது. 10 வருடத்துக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவரும் கைதியாக கார்த்தி நடித்திருக்கிறார். இப்படத்திற்காக லாரி ஓட்டும் பயிற்சி பெற்று படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் லாரி ஓட்டி நடித்திருக்கிறார். தந்தை மகளுக்குமான பாசத்தை மையமாக கொண்ட கதையுடன் போதை மருந்து பின்னணியிலான ஆக்‌ஷன் அதிரடிகளும் கதைக்களமாக்கப்பட்டிருக்கிறதாம். சித்திரம் பேசுதடி நரேன் போலீஸ் அதிகாரியாகவும், வில்லனாக ரமணாவும் நடித்திருக்கின்றனர்.

விஜய்யின் பிகில் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. கால்பந்தாட்ட கோச்சாக விஜய் நடித்திருப்பதுடன் தாதாவாகவும் மற்றொர கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.

ஏற்கனவே இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை சமந்தா இப்பட டிரெய்லரை பார்த்து விஜய், இயக்குனர் அட்லியை பாராட்டியிருக்கும் நிலையில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ரஸல் அர்னால்ட் தன வலைதளப் பக்கத்தில், 'பிகில்' திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்து ரசித்தேன்.

விஜய்யின் ராயப்பன் கேரக்டர அந்தர் மாஸ் ஆக இருக்கிறது. இப்படம் ரிலீசாகும் வார இறுதி நாட்களில் எனக்கு 2 டிக்கெட்டுகள் கிடைக்குமா? என்று கேட்டிருக்கிறார்.

More News >>