நள்ளிரவில் ரஜினியை பின்தொடர்ந்த வாலிபர்.. வீட்டுக்குள் அழைத்து போஸ்..

இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் இருந்து அவரை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்றார்.

தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு வந்த நடிகர் ரஜினி, வழக்கம் போல் மன அமைதி தேடி இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றார். சில நாட்கள் அங்கு தங்கி விட்டு இன்று அதிகாலையில் அவர் சென்னை திரும்பினார். ரசிகர் மன்றத்தினருக்கு இன்று அவர் வருவது தெரிந்திருந்தது. அதனால், அவரை காண ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

அந்த கூட்ட நெரிசலை தடுத்து ரஜினியை பாதுகாவலர்கள் வெளியே அழைத்து வந்தனர். பின்னர். விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு ரஜினி புறப்பட்டு சென்றார். அவரது காரைத் தொடர்ந்து ஒரு ரசிகர் பைக்கில் சென்றார். அவர் நடிகர் ரஜினியின் காரை, அவரது வீடு வரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

ரஜினியின் கார் வீட்டிற்குள் சென்றதும், ரஜினி அங்கிருந்த வேலையாளிடம் கூறி, வாசல் வரை பின்தொடர்ந்து வந்த அந்த வாலிபரை வீட்டிற்குள் அழைத்து வரச் சொன்னார். அந்த வாலிபரும் மகிழ்ச்சியுடன் உள்ளே வந்தார். அவரிடம் ரஜினி, இப்படி வேகமாக பைக்கை ஓட்டாதீர்கள் என்று அறிவுரை கூறி விட்டு, அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.

More News >>