4 வேடத்தில் நடிக்கிறாரா விஜய் தயாரிப்பாளர் அர்ச்சனா பதில்... நெட்டில் வைரலாகும் விஜய்யின் பிகில் கதை...

விஜய் நடிக்க அட்லி இயக்கியுள்ள பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25 ம்தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் கதை பற்றி சில தகவல் பரவி வருகிறது.

பிகில் என்று அழைக்கப்படும் விஜய் ஒரு பெரிய கால்பந்தாட்ட வீரர். அவரது தந்தை லோக்கல் கால்பந்தாட்ட வீரர் தான். வடசென்னையின் பிரபல ரவுடியான அவர் தனது மகனை பெரிய கால்பந்தாட்ட வீரராக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் விளையாட்டில் வரும் அரசியல் அவரது கனவை சிதைக்கிறது.

இதற்கிடையே கூடயிருப்பவர்களாலேயே துரோக செயலால் பிகில் வீழ்கிறார். அவரது தந்தையும் (தாதா விஜய்), நண்பர் கதிரும் கொல்லப்படுகிறார்கள். இதற்கிடையே தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மகளிர் கால்பந்து அணிக்கு பயிற்சி அளித்துக்கொண்டே, மற்றொரு பக்கம் தனது தந்தை மற்றும் நண்பனின் மரணத்திற்கு பழிவாங்குகிறார் பிகில்.

இந்த கதையை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். ஆனால் இது டிரெய்லரை பார்த்து யாரோ எழுதிய கதை என்று கூறுகிறார்கள். பிகில் படத்தின் நிஜகதை என்ன என்பதும் அதில் அரசியல் அதிரடி வசனங்கள் இருக்குமா என்பதெல்லாம் படம் வெளியானபிறகுதான் தெரியவரும்.

படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா? அப்படியென்றால் பர்ஸ்லுக் போஸ்டரில் 4 விஜய் படங்கள் வெளியிட்டது ஏன் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் கேட்டபோது இரட்டை வேடமா? 4 வேடமா? என்பதெல்லாம் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்று சஸ்பென்ஸாக பதில் அளித்தார்.

More News >>