விபத்தில் சிக்கிய மஞ்சுமா மோகன் கால் எலும்பில் முறிவு... ஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார்...

மஞ்சுமாமோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார். ஊன்றுகோல் உதவியுடன் மஞ்சுமா தனது அறையிலிருந்து நடந்து வருவதபோல் அப்படம் இருந்தது.

என்ன ஆச்சி, மஞ்சுமாவுக்கு என்று ரசிகர்கள் அலைபாய்ந்தனர். அதுபற்றி மஞ்சுமா விளக்கினார். அவர் கூறியது: சில வாரங்களுக்கு முன் எதிர்பாராமல் விபத்தில் சிக்கினேன். எனது காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை நடந்தது. அடுத்த ஒரு மாதத்துக்கு நான் ஓய்வில் இருக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த கடினமான தருணம் எது என்று முன்பெல்லாம் என்னிடம் கேட்டால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் இல்லை என்று பதில் அளிப்பேன்.

அந்த கடினமான தருணம் இந்த விபத்தின் மூலம் வந்திருக்கிறது. அதுவும் ஒருவகையில் நன்மையாக என்றே எண்ணத் தோன்றுகிறது.

என் மனவருத்தம் என்னவென்றால் நான் விரும்பி பார்க்கும் எனது வேலைகளை பார்க்க முடியாததுதான். இந்த தருணத்தை எனக்கான நேரமாக நான் எடுத்துக் கொண்டு மகிழ்கிறேன். இப்போது தான் எனக்கென்று நேரம் ஒதுக்குவது முக்கியம் என்பதை நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். இந்த சூழல் என்னைப்பற்றி நான் யோசிக்கவும், என்னை உறுதியானவளாகவும் மாற்றியிருக்கிறது' என்றார்.

More News >>